Monday, June 8, 2009

தமிழ் ஈழம் மலர ஓட்டுஇங்கே போடுங்கள்

தமிழ் ஈழம் மலர ,தமிழ் ஈழத்தில் நடந்தம்கொடுமைகளுக்கு விசாரணை வேண்டி ..ஒரு இணையத்தளம் துவக்கப்பட்டுள்ளது .அதிலோ இதுவரை பத்து லச்சம் பேர் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக ,தமிழருக்கு தனி நாடு அவசியம் என வோட்டு போட்டுள்ளனர் .நீங்களும் இதற்க்கு அதரவு தெரிவித்து நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் ....நன்றி
ஈழம் மலர இங்கே அழுத்துங்கள்

Thursday, May 21, 2009

பிரபாகரன் சர்ச்சை -ஆனந்த விகடனின் இரட்டை வேடம்

ஆனந்த விகடன் எப்போதும் தான் ஒரு வியாபாரி என்பதையே நிருபித்து வருகிறது ..சமீபத்திய தனது ஜுனியர் விகடன் இதழில் பிரபாகரன் இறப்புக்கு ஆதாரங்கள் எதுவும் சரியாக காண்பிக்காமல் இலங்கை அரசு மழுப்புகிறது என கார சாரமாக கட்டுரை வெளியிட்டது .ஆனால் அதிர்ச்சி தரும் படி .பிரபாகரன் இறந்து விட்டார் என்பது போல ,அஞ்சலி கட்டுரை போல தமிழ் ஈழம் அவ்வளவு தானா என்கிறது .
தமிழர்களின் சோகத்திலும் சோறு தின்னும் ஆட்களை என்ன செய்வது ...

பிரபாகரன் உயிருடன் உள்ளார் .நலமாக பத்திரமாக உள்ளார் என்பதற்கு கடந்த காலங்களில் அவர் தனது உயிரை ம்காப்பற்றி கொள்ள எவ்வளவு உசாராக இருந்தார் என்பதை பல மீடியாக்கள் கட்டுரை வெளியிட்டன .மேலும் அவரை சுற்றி எப்போதும் இருக்கும் இருநூறு கரும் புலிகளும் நம்பிக்கை தருகின்றனர் ..

இலங்கை வன்னி காடுகளின் நிலவரத்தை அங்குள்ள நில அமைப்பை எந்த சர்வதேச மீடியாக்களும் ,இலங்கை ராணுவமும் அறிய வாய்ப்பில்லை .அப்படியிருக்க அவர் தப்பியிருக்க முடியாது என சொல்ல இயலாது .
மரபணு சோதனை நடத்த வேண்டும் என குரல் கேட்க ஆரம்பித்ததுமே ..பிரபாகரன் குடும்பமே காலி என மறுபடி கதை கட்டி உள்ளது இலங்கை.

மீண்டும் அவர் வருவார்.இந்த சமயத்தில் மிகுந்த தைரியத்தை அளித்த பல.நெடுமாறன் ,மற்றும் நக்கீரனுக்கு நன்றி.

##கலைஞர் காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளார் .சோனியாவை பணிய வைக்கும் இந்த முயற்சி தோற்று கலைஞர் வெளியில் இருந்து காங்கிரசுக்கு ஆதரவு தர வேண்டும். ஈழ தமிழர் பிரச்சனையை வைத்து காங்கிரசுக்கு அவர் கடும் நெருக்கடி தர வேண்டும் .இதன் மூலம் தமிழ் உணர்வலையை தமிழகத்தில் தட்டி எழுப்பலாம் ..
தள்ளாத வயதில் பாத்ரூம் போக முடியாதவர் ,டெல்லி போயிருக்கிறார் என்றால்
தமிழனுக்காகவா .../தமிழனின் பொறுமையை நினைத்தால் எரிகிறது ...

#மணப்பாக்கம் எனும் தளத்தில் மணிவண்ணன் எழுதிய கமென்ட் கீழே :
இந்தியாவை
கோபாலபுரத்திலேரந்து ஆள முடியாதா, ஐயகோ! கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாமல் இனிமேல் இந்தியா என்ன செய்யுமோ? எழவெடுத்த ஈழப்போரும் இல்லையே? ஈழ தமிழனுக்காக அமைச்சர் பதவியை இழந்தோம் என்றும் கலாய்க்க முடியாது,-

Saturday, March 21, 2009

ஈழத் தமிழர்களுக்கு சோப்பு சீப்பு கண்ணாடி வழங்கும் கருணாநிதியும், ஈழத் தமிழர் காதில் பூசுற்றும் ராமதாசும்

ஈழத்தில் இனவெறிப் படுகொலை நின்ற பாடில்லை. நாளாந்தம் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். இந்தியா சார்க் மாநாடுகளின் விதிகளுக்கு உட்பட்டு இலங்கைக்கு தொழில் நுட்ப உதவிகளை வழங்கி ஈழத் தமிழினத்தைக் கொன்று குவித்து வருகிறது. என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழர்களைக் காப்பேன் என்று கரடி விட்ட கருணாநிதி வழக்கம் போல தன் துரோக நாடகத்தை அரங்கேற்றி இப்போது இலங்கை விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பட்டிற்கே வந்து நிற்கிறார். இலங்கையில் போரை இந்தியா நடத்தவில்லை என்றும் இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் சொன்னதன் மூலம் இது வரை தான் கட்டி வைத்திருந்த தமிழ், தமிழர், திராவிடர் என்னும் முகமூடி பலூனை நீண்ட காலத்திற்குப் பிறகு கருணாநிதியே உடைத்திருக்கிறார். இது ஒரு வகையில் நல்லதுதான். இனிமேலாவது நாம் விழிப்புணர்வு பெறவும் புதிய அரசியல் தலைமைக்காக முயற்சிக்கவும் ஒரு தொடக்கமாக அமையும். கருணாநிதி மீதான இந்த அயற்சியிலிருந்து மீள நாம் புதிய தலைமைகளைத் தேடும் சூழலுக்கு (தமிழர்கள்) தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதெல்லாம் நல்ல மாற்றம் தான். ஆனால் கருணாநிதி இங்கே வெளிப்படையாக அம்பலமான அளவுக்கு இதே தமிழின முகமூடிகளைச் சுமந்திருக்கும் ஏனைய தமிழ் லவடாக்கள் அம்பலமாகவில்லையோ என்று தோன்றுகிறது.

தியாகி முத்துக்குமாரின் எழுச்சிகரமான இறுதி நிகழ்வின் போது “வரும் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்துவது” என்பது பொது வேலைத் திட்டமாக அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை கூட்டங்களிலேயே வெளிப்படையாக காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்கள் பலரும். காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கும் ராமதாஸ், திருமா இருவரும் இல்லாத காவடி எல்லாம் தூக்கினார்கள்.
Tirumavalavan
சிறுத்தைகளுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் மோதல் வெடித்தது. சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டார்கள். இத்தாலிய வெள்ளைப் பெண்மணி சோனியாவின் உருவபொம்மையை ராஜீவின் கொடும்பாவியை கொளுத்தியதற்காக விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டர்கள் 23 பேருக்கு மேலானோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் சட்டத்திலும் சிறையிலடைத்திருக்கிறது கருணாநிதி அரசு. (காங்கிரஸ்காரனை அறிக்கை விடச் சொல்லி அறிக்கை விட்ட பிறகு கைது செய்து விட்டு காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள் ஆகவே செய்கிறேன் என்பதை எல்லா கைதுகளுக்குமே ஒரு காரணமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கருணாநிதி)

இந்தக் குத்தாட்டங்கள் காமெடிக் காட்சிகள் ஈழ மக்களை முன் வைத்து தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தபோது இந்த கோமாளிகளுக்கு புதிய அவலைக் கொடுத்தது தேர்தல் கமிஷன். அதுதான் தேர்தல் அறிவிப்பு. அவ்வளவுதான் ஈழ ஜுரம் முடிவுக்கு வந்து “யார் மனசுல யாரு.. உங்க மனசுலே நானு” என்று கோமாளிக் கூட்டணி பேரத்தில் மூழ்கிவிட்டார்கள். திருமாவளவன் நிலை பரிதாபம்தான். “திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என்பதை கருணாநிதிதான் சொல்ல வேண்டும்” என்று தொடர்ந்து கதறினார் திருமா. சந்திப்புகளுக்கான நேரங்களைக் கேட்டு அது கடைசி வரை திருமாவுக்குக் கிடைக்கவே இல்லை.

ஆனால் கருணாநிதி சொன்னார் “இப்போதான் காங்கிரஸோடு கூட்டணி பேசத் தொடங்கியிருக்கிறோம். உங்கள் ஆசை நிறைவேறலாம் நிறைவேறாமலும் போகலாம்” என்றார். அதாவது காங்கிரஸ்காரன் தயவு செய்தால் விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் இணைப்பேன் அல்லது இடமில்லை என்பதைத்தான் கருணாநிதி தந்திரமாக பத்திரிகையாளர்கள் கேட்டது மாதிரி கேட்டு பதிலைச் சொன்னது மாதிரி சொன்னார் திருமாவிற்கு.

ஆனால் ராமதாஸ் கூட்டணிக்கு வருவாரா? வரமாட்டாரா? அறிவாலயமா? போயஸ்கார்டனா? என்று பேரம் பேசித் திரிந்த போது, கூட்டணியில் திமுக, காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு போணியாகாதோ என்று பயந்த கருணாநிதி உடனே “அவர் நீண்ட காலமாக எங்கள் அணியில் உள்ளார். ஏனென்றால் சமத்துவக் கொள்கை, ஜாதி ஒழிப்பு, பொதுவுடைமை கொள்கை இவற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நாங்களும் ஒரே குறிக்கோள் கொண்டவர்கள். அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள்” என்றார் கருணாநிதி.

கருணாநிதியின் இந்த அறிக்கையால் குளிர்ந்து போன திருமா சொன்னது “அம்பேத்கார், பெரியார் ஆகிய மகத்தான தலைவர்களின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காகவும், ஒட்டுமொத்த தமிழினத்தின் நலன்களுக்காகவும் போராடி வரும் எம்மை அரசியல் அரங்கில் அங்கீகரிக்கும் வகையில் முதல்வரின் அறிவிப்பு பேருவகையளிக்கிறது. சாதி ஒழிப்பு, சமத்துவம், பொதுவுடமை மற்றும் ஈழத் தமிழர் விடுதலை ஆகிய கொள்கைத்தளங்களில் தமிழினத்தின் நலன்களுக்கான களங்களில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார் திருமா.

அதாவது “ஈழத் தமிழர் விவகாரத்தில் திமுகவுடன் உடன்பட்டு ஒன்றுபட்டு” திருமாவளவன் குரல் கொடுப்பாராம். திருமாவின் உடன்பாட்டை கொள்கை உடன்பாடு என அவரது வார்த்தைகளில் இருந்து நாம் புரிந்து கொண்டால், ‘மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஈழத் தமிழர் விவகாரத்தில் ஒன்றுதான்’ என்று சொன்ன கருணாநிதியின் கொள்கையோடும் காங்கிரஸின் கொள்கையோடும் திருமா இணைந்து போவதை அவரது வார்த்தைகளில் இருந்தே நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்.

நாங்கள் திமுகவோடுதான் கூட்டணியில் உள்ளோம் காங்கிரசோடு அல்ல என்று திருமா சொன்னாலும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலேயே திருமாவளவன் நீடித்திருக்க வேண்டியதாயிற்று. அப்படி என்றால் . காங்கிரஸை வீழ்த்துவோம் என்கிற பொது வேலைத் திட்டம் பற்றிய திருமாவின் கருத்து என்ன? ஒரே மேடையில் தங்கபாலுவும், கருணாநிதியும், திருமாவும் தோன்றுவார்களா? துரோகத்தின் விளைநிலமாக மாறிப் போன கருணாநிதி இப்போது ஈழத் தமிழர்களுக்காக அனுப்பப் போவதாக சொல்லும் சட்டிப்பானை, சோப்பு, சீப்பு, கண்ணாடி நிவாரணத்தில் திருமாவும் தன்னை இணைத்துக் கொள்வாரோ என்னவோ?

வெறும் கையால் முழம் போடும் ராமதாஸ்

ஈழத்தமிழர்கள் மீதான இனவெறிப் போரை ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவிக்கும் மத்திய காங்கிரஸ் அரசில் தன் மகன் அன்புமணி உட்பட சிலருக்கு மந்திரிப் பதவிகள் வாங்கிக் கொடுத்து அதிகாரத்தைப் பகிர்ந்திருக்கும் ராமதாஸ் ஈழத் தமிழர் தொடர்பாக பேசிய பேச்சுக்களை வரிசையாகப் பார்த்தாலே போதும். ராமதாஸுக்குள் எத்தனை கருணாநிதிகள் ஒளிந்திருக்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.

1. “தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதனைப் பின்பற்றுவோம்” திமுகவின் ராஜிநாமா நாடகத்தில் ராமதாஸ் பங்கேற்றபோது கூறியது.

2. புதுடில்லியில் காங்கிரஸ் கூட்டாளிகளை சந்தித்த பிறகு, ராமதாஸ் நிருபர்களை சந்தித்தபோது, “இலங்கை தமிழர் பிரச்சினை தி.மு.க-பா.ம.க. இடையே மீண்டும் ஒற்றுமையைக் கொண்டு வருமா?" என்று ஒரு நிருபர் கேட்டார். ராமதாஸ், "இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மட்டுமே ஒற்றுமை" என்று திருவாய் மலர்ந்தார்.

3. “இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும். இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதைப் பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.”

அதே மேடையில் “தமிழன் என்றால், மத்திய அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை என்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சமாதி கட்டி இருப்பார்கள். இந்த கருத்துக்கு மறுப்பு யாராவது தெரிவித்தால், அவர்கள் சென்னையில் மேடை போட்டு சொல்லட்டும். அதில் நானும், திருமாவளவனும் பேசுவோம்.” இவையெல்லாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த திருமாவின் உண்ணாவிரதத்தை பழச்சாறு கொடுத்து முடித்து வைத்த ராமதாஸ் அதே உண்ணாவிரத மேடையில் பேசியது.

4 “இலங்கைப் பிரச்சினையில் அரசியல் தீர்வு காண எவ்வளவு முயன்றும் மத்திய அரசு எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மனிதச்சங்கிலிப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், கையெழுத்து இயக்கம், பிரதமருடன் சந்திப்பு என்று பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு தமிழக மக்களை மதிக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் சுயமரியாதையை இழந்து இருக்கிறோம். வெட்கத்தால் தலைகுனிகிறோம். தமிழர்களையும். தமிழக அரசையும் ஓட்டு மொத்தமாக இந்திய அரசு அவமானப்படுத்தி விட்டது. காங்கிரசுடன் கூட்டணி இனியும் நீடிக்க வேண்டுமா என்று எல்லோரும் கேட்கிறார்கள். இது குறித்து நாங்கள் ஒரு மாதத்தில் பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்வோம். இலங்கையில் நடப்பது இன அழிப்புப் போர் என்பதை உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ளன. ஆனால் இந்தியா மட்டும் தயக்கம் காட்டி வருகிறது.” சென்னையில் நடந்த விழா ஒன்றில் ராமதாஸ் பேசியது.

5. “இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்களாம். இதன் மூலம் தமிழகம் முழுவதும் விளக்கக் கூட்டம், பேரணி, மனித சங்கிலி, மாநாடு, அறப்போராட்டம் இதையெல்லாம் நடத்தி இலங்கை அரசுக்கும், மத்திய அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பயணத்தை தொடங்கப் போகிறார்களாம். இதன் மூலம் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரின் காதிலும் பூ சுற்றியுள்ளனர். இந்த முடிவின் மூலம் இலங்கைத் தமிழர்களைக் காப்பதில் திமுக 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி சென்றுள்ளது. போர்நிறுத்தம் இல்லாமல் எப்படி பேச்சுவார்த்தை தொடங்க முடியும், அமைதி ஏற்படும், அதிகார பகிர்வு ஏற்படும்? இது ராஜபக்ச கட்சியின் தீர்மானம் போல் உள்ளது. இவையெல்லாம் கருணாநிதிக்கே வெளிச்சம். மொத்தத்தில் அன்றாடம் செத்து மடியும் இலங்கைத் தமிழர்களை திமுகவும், ஆளும் திமுக அரசும் கைவிட்டுவிட்டன. தமிழர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர். ராஜபக்ச அரசுக்கும், திமுக அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லையென வெளிப்படையாகவே கருணாநிதி அறிவித்துள்ளார்.” பத்திரிகையாளர் சந்திப்பின் போது.

6. ‘‘இங்கு பேசுவோர் எந்த அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ விமர்சிக்கக் கூடாது” இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை கலந்தாலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் (இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் திமுகவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தபோது ராமதாஸ் கேட்டுக் கொண்டது)

Anbumani and Sonia புலிகள் போராளிகள் அவர்கள் தாயக விடுதலைக்காக போராடுகிறவர்கள். அவர்களை எவனாலும் வெல்ல முடியாது என்றெல்லாம் சொல்லி விட்டு, ‘புலிகளை யாரென்றே எங்களுக்குத் தெரியாது எந்தக் குழுவையும் நாங்கள் ஆதரிக்கவில்லை’ என்றெல்லாம் திருவாய் மலர்ந்ததை நாம் இங்கு எடுத்து கையாளவில்லை.

நண்பர்களே மேலே ராமதாஸ் சொன்னக் கருத்துக்களை இன்றைய அரசியல் சூழலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அவர் சொன்னதில் ஏதாவது ஒன்றுகூட நடந்ததா? தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் என்றாரே அப்படி எதுவும் நடந்ததா? இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்தபோது அதை ஒடுக்க கருணாநிதி அரசு பல வழிகளைக் கையாண்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக இருந்த போது ராமதாஸ் சொன்னார். “யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தாலே போதும் போராட்டம் வெற்றி பெறும்”. இப்படி போராடியதால்தான் ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி தமிழகத்தில் காயடிக்கப்பட்டது. இன்றைக்கு வரை ராமதாஸ் மகன் அன்புமணி ஈழத் தமிழர் விவகாரம் குறித்து எதிர்த்தோ ஆதரித்தோ ஏதாவது ஒரு கருத்தாவது சொல்லியிருப்பாரா? (இதைக் கேட்டால் அன்புமணியின் பசுமைத் தாயகம்தான் ஈழத் தமிழர் விவகாரத்தை ஐநா அமைப்புக்கு கொண்டு சென்றது என்று கூட செல்வார்கள். அன்புமணியாலோ, பசுமைத் தாயகம் என்கிற தன்னார்வக் குழுவாலோ அப்படி ஏதும் ஐநாவில் விவாதங்கள் நடந்ததாகத் தெரியவில்லை)

மேலே கண்ட ராமதாசின் இம்மாதிரியான வெற்றுச் சவடால்களோடுதான் இன்றைக்கு கூட்டணிக்காக ராமதாஸ் நடத்துகிற பேரங்களையும் நாம் பார்க்க வேண்டும். சோனியா காந்தியைப் பார்த்து போர் நிறுத்தம் கோரப் போவதாக டில்லிக்குச் சென்று, டில்லியிலேயே ராமதாஸ் இருந்தபோதுதான், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்படி ராமதாஸின் மூக்கை அறுத்தார். “இலங்கைத் தமிழர்களின் நலன்களை விடுதலைப் புலிகள் சேதப்படுத்தி விட்டனர். இன்றைய நிலைக்கு அவர்கள்தான் காரணம். அவர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு, தாங்கள் பிடித்து வைத்துள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும்.”

தமிழகத்தில் ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு சவக்குழியாக மாறுகிறது என்பதை அறிந்த ப்ரணாப் தூத்துக்குடியில் பேசியபோது “புலிகளின் போர் நிறுத்தக் கோரிகையை இலங்கை அரசாங்கம் ஏற்று போர் நிறுத்தம் செய்ய வேண்டும்” என்று சொன்னபோது கருணாநிதி உச்சி குளிர்ந்து போனார். அதே அளவு குதூகாலத்தை ராமதாசும் அடைந்தார். “தற்போது இந்தியா கொஞ்சம், கொஞ்சம் தயக்கத்தை கைவிட்டு போர் நிறுத்தம் பற்றி பேசத் தொடங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். இந்த மாற்றம் பேச்சளவில் நின்றுவிடாமல் செயல் அளவில் இருக்க வேண்டும்” என்று கருத்து சொன்னார்.

இவர்கள் அனைவருமே இன்று ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் கொள்கையோடு ஈழ விவகாரத்தில் உடன்பட்டுப் போகிறார். ராமதாஸோ ஈழ விவகாரத்தில் கருணாநிதியைத் திட்டி காங்கிரஸ் குறித்து விமர்சனமே வைக்காமல் காலத்தைத் தள்ளி விட்டார். திமுக காலைவாரிவிட்டது உண்மைதான். ஏன் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ராமதாசுக்கு கிடையாதா? கடைசி வரை தன் மகனின் பதவியைக் காப்பாற்றிக் கொண்டதோடு, அதே காங்கிரஸோடு மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதில் இருந்து ராமதாஸுக்குள் பத்து கருணாநிதிகள் ஒழிந்திருப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

‘பத்து நாட்கள் தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம். தடாலடி தண்டால்கள் எடுப்போம். நாங்கள் வித்தியாசமான கட்சி’ என்றெல்லாம் பேசும் ராமதாஸ் ஈழத் தமிழகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மாறாக எழுந்து விட்ட பெருநெருப்பில் குதித்து எல்லா நாடகங்களையும் அரங்கேற்றி பாதகம் ஏதும் இல்லாமல் காய் நகர்த்தி இலங்கைத் தமிழர் பேரவையையும் அதன் போராட்டங்களையும் காயடித்து, இயல்பாக எழுந்த ஈழத் தமிழர் ஆதரவு அலையை வீணடித்து அதை வெற்றுச் சடங்காக மாற்றி இன்றைக்கு எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு கூடுதல் சீட்டுக்காக அதிமுக, திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கிற ராமதாஸ்தான் இந்தத் தலைமுறையில் நான் பார்த்த மிகப் பெரும் துரோகி. இந்தப் போராட்டங்கள் வீணடிக்கப்பட்டதற்கும் அவரே பொறுப்பாளி. இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையை ஏதோ பாட்டாளி மக்கள் கட்சி மேடையைப் போல் மாற்றி விட்டார்.

அடுத்த பிரதமராக வருவதற்கே தகுதியுள்ளவர் என்று புளகாங்கிதப்படும் அன்புமணி மட்டும் என்ன செய்தார்? சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி உறுப்பினர் மருந்துகளின் கையிருப்பு குறைந்திருப்பது தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இலங்கை சுகாதார அமைச்சர் நிமல் சிறீபால டி சில்வா, “இலங்கையில் போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சைக்குப் பின் பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்தை இந்தியா அனுப்புகிறது. ‘பெதாடைன்' என்கிற அந்த மருந்தை இந்தியா அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்தியா மருந்து அனுப்பும்” என்றும் தெரிவித்தார்.

போரால் காயமடைந்த சிங்கள வீரர்களுக்கு மருந்துகள் அனுப்புவது ராமதாசின் மகன் அன்புமணிக்குத் தெரியாமல் நடந்திருக்கும் என்றால் இவ்விதமான ஒரு அமைச்சர் எதிர்காலத்தில் பிரதமராக வந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இந்தக் கூத்துக்களைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து மருத்துவக் குழு ஒன்றை அனுப்புவதாக நாடகம் ஆடி இந்திய ராணுவ விமானத்தில் ராணுவ மருத்துவ அதிகாரிகளோடு ஒரு மருத்துவக் குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் குழு புல்மோட்டையில் ஒரு மருத்துவமனையை நிறுவி இலங்கை சுகாதார அமைச்சகத்தோடு சேர்ந்து மருத்துவ சேவை செய்கிறார்கள். சிகிச்சை போரால் காயமடையும் அனைவருக்கும் என்றால் ராணுவத்தினருக்கும் சேர்த்துதானே! (இதெல்லாம் யார் செய்தது? அன்புமணிக்கு இதெல்லாம் தெரியாதா?) ஆனால் மருத்துவக் குழு என்ற போர்வையில் இந்திய ராணுவத்தினரும் உளவு நிறுவனமும் இலங்கைக்குள் ஊடுறுவி இருப்பதாக ஜனதா விமுக்தி பெரமுனா பாராளுமன்றத்திலே வெளிப்படையாகவே குற்றம் சுமத்துகிறது.

இது வெறுமனே மருத்துவ குழு என்றால் ஏன் அதை இலங்கை தாதிமார்ச் சங்கம் எதிர்க்கிறது? இலங்கை மருத்துவர் சங்கம் ஏன் இந்தக் குழுவின் வருகையை எதிர்க்கிறது? இந்திய இராணுவக் குழுவால் அமைக்கப்பட்டுள்ள புல்மோட்டை மருத்துவமனை குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் ஜே,வி.பியின் அனுரகுமார திசநாயக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலங்கை அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா “இந்தியாவின் ஒத்துழைப்பு மட்டும் கிடைக்காது போயிருந்தால் இந்தப் போரில் இந்தளவுக்கு எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்காது. சர்வதேச நாடுகள் பலவும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, இந்தியா பெரும் சக்தியாக இருந்து இந்தப் போருக்கு ஆதரவு வழங்கியது.” என்றார். மேலும், இந்த மருத்துவமனை அமைவது குறித்து இந்தியாவும் இலங்கையும் சில பேச்சுக்களை நடத்தியது என்றும், அந்தப் பேச்சுக்களின் அடிப்படையிலேயே ராணுவ மருத்துவமனை அமைய இலங்கை அனுமதித்தது எனவும், 45 படுக்கைகளைக் கொண்ட ஒரு மருத்துவமனை அமைவதால் ஒரு நஷ்டமும் ஏற்படப் போவதில்லை எனவும், அதனால் ஏற்படும் லாபமே அதிகம் என்றும் ஜே.வி.பி உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர்.

கேபினெட் அந்தஸ்துள்ள அன்புமணி ராமதாசின் ஒப்புதல் இல்லாமலா இந்த ராணுவ மருத்துவமனை இலங்கையில் அமைக்கப்பட்டது? அந்த மருத்துவமனையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி என்று சொல்லி விட்டு அங்கு சிங்கள ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது அன்புமணி ராமதாசின் ஒப்புதலோடுதானா, இல்லையா? மிகத் தந்திரமாக ராமதாஸ் அவர்கள் கட்சிக்காரர்களுடனோ கருணாநிதியிடமோ அரசியல் நடத்தலாம், ஆனால் எல்லோரையும் முட்டாள்கள் என நினைக்கக் கூடாது. பொறுப்பானவர்களாக இருந்தால் நேர்மையாக இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

நீண்ட வியாக்கியானாங்களை நாம் செய்தாயிற்று. ‘இப்போ கடந்த முறையை விட இரண்டு சீட் யார் அதிகம் தருவார்களோ அவர்களுடன் கூட்டு. அப்போ ஈழம்? போர் நிறுத்தம்? வெங்காயம் அதெல்லாம் தேர்தலுக்கு அப்புறம் பாக்கலாம். அதான் இந்தியா போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்துகிறதே’ என்றெல்லாம் இந்திய பார்ப்பனச் சக்திகளுக்கு வக்காலத்து வாங்கும் ராமதாசின் யோக்கியத்தனம் இரண்டே இரண்டு நாடாளுமன்ற சீட்டிலேயே தங்கியிருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் பேசலாம் கடைசியில் ஒட்டு வாங்கி ஜெயித்து விட்டு மகனை அமைச்சராக்கி, எல்லா நாடகங்களையும் அரங்கேற்றலாம் என்கிற காங்கிரஸ், திமுக, ராமதாஸ் கூட்டணிக்கு மக்கள் சாவு மணி அடிக்க வேண்டும். இல்லை என்றால் ஈழத்திலே வீசப்பட்ட குண்டு தமிழகத்தில் வீசப்பட அதிக நேரம் ஆகாது. இவர்களால் ஈழத் தமிழனை மட்டுமல்ல இந்தியத் தமிழனையும் காப்பாற்ற முடியாது.

நண்பர்களே! ஈழத் தமிழர் மீதான சிங்கள இனவெறிப் போரை முட்டுக் கொடுத்து நடத்திய காங்கிரஸை வீழ்த்துவதுதான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. போருக்கு துணைபோகும் காங்கிரஸ்காரனை யாரெல்லாம் தங்கள் முதுகில் சுமந்து வருகிறார்களோ (திமுக, பாமக அல்லது வேறு யாரானாலும்) அவர்களும் ஏதோ ஒரு வகையில் இந்தப் படுகொலைகளில் கை நனைக்கிறார்கள். இந்தத் தேர்தலில் அவர்களுக்கும் சேர்த்தே முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் நமது திட்டமாக இருக்க வேண்டும்.

- தொம்பன் uraiyaadu@gmail.com

நன்றி-கீற்று

Friday, March 20, 2009

ராஜீவ் கொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்தியா ஆதரவளித்திருக்காது: தமிழருவி மணியன்


[சனிக்கிழமை, 07 மார்ச் 2009, 08:39 மு.ப ஈழம்] [க.நித்தியா]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்காது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் விலகிய தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (03.03.09) ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு தமிழருவி மணியன் வழங்கிய நேர்காணல்:

தமிழக மக்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பாரிய உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுமிடத்து இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக மக்களிடையே ஈழத் தமிழர் உணர்வலை மிகப்பெரியளவில் பெருகியிருக்கிறது என்பதைத்தான் நாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான செய்திகள் வலம் வந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வே தமிழகம் தழுவிய அளவில் மிகப் பெரிதாக இருந்தது. தமிழர்களின் இருதயங்கள் ரணப்பட்டன. விடுதலைப் புலிகள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்கள் என்பது போல மக்களிடையே ஒரு மிகப்பெரிய சோர்வு இருந்தது. ஆனால், ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் விடுதலைப் புலிகள் எந்தளவுக்கு தமிழக மக்களால் ஆராதிக்கப்பட்டார்களோ அதனைவிடக் கூடுதலான அளவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. ஈழத்தமிழர்களின் இன்னல்கள் துடைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு தமிழக மக்களிடையே இன்று என்றுமில்லாதளவுக்கு உருவெடுத்திருக்கிறது.

தமிழகத்தில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களின் 12 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதுதான் வரலாற்று உண்மை.

ராஜீவ் காந்தி படுகொலையை சுற்றியே இலங்கை தொடர்பான இந்திய காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை பின்னப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையில் நீங்கள் பார்க்கிறீர்கள்?

காங்கிரஸ் அரசின் தலைமையில் இன்றுள்ள மத்திய அரசின் கருத்தோட்டமாயினும் -

வெளியுறவுக் கொள்ளை என்றாலும் -

இனி எந்தக் கட்சி மத்தியிலே ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வந்தாலும் -

வெளியுறவுக் கொள்கை என்று வரும்போது அவர்கள் இந்த அணுகுமுறையைத் தான் பின்பற்றுவார்கள்.

ஏனெனில், பாகிஸ்தான் ஒருபக்கம் பகையோடு இருக்கின்றபோது, வங்கதேசம் இன்னொரு பக்கம் பகையோடு இருக்கின்றபோது, சீனா எந்த நேரத்தில் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருக்கின்றபோது அதன் தெற்குப் பக்கம் இருக்கின்ற இலங்கைத் தீவு தனக்கு பகையாக மாறி விடக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தியா பாசிச ராஜபக்ச அரசுக்கு பின்னால் நிற்கின்றது என்பதுதான் உண்மை.

எனவே, ராஜீவ் காந்தியின் படுகொலை இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கலாம். ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்கும் என்று நான் நம்பவில்லை. அதனை செய்தவர் இந்திரா காந்தி.

இந்திரா காந்திக்கு இருந்த நம்பிக்கை, இந்திரா காந்திக்கு இருந்த துணிச்சல், இந்திரா காந்திக்கு இருந்த ஈடுபாடு இந்திரா காந்திக்கு பின்னால் வந்த எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.

ராஜபக்ச அரசாங்கம் எப்போதும் தமக்கு சார்பாக இருக்குமென்று இந்திய மத்திய அரசு எப்படி நம்புகிறது?

அதுதான் இந்திய மத்திய அரசு செய்யும் மிக மோசமான தவறு. அதாவது சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையின் பக்கமாக நின்று விடக்கூடாது என்பதற்காக இலங்கை எதைச் செய்தாலும் இந்தியா அதனை கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தானின் பிடியில் இருந்தும் சீனாவின் பிடியில் இருந்தும் இலங்கையை விடுவித்து தனது பக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இது மிக மோசமான கண்ணோட்டம். வெளிவிவகாரத்துறை சார்ந்த மிகப்பெரிய பிழையான முடிவு என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுக்கு துணையாகவோ, சார்பாகவோ, நன்றி உணர்வோடோ இருந்தது கிடையாது.

வங்க தேசத்தை உருவாக்க இந்திரா காந்தி முனைந்தபோது பாகிஸ்தானின் வானூர்திகள் தரித்து நிற்க உதவி செய்ததுதான் இலங்கை என்பதை இன்றைய இந்திய அரசு மறந்து விட்டது.

பாகிஸ்தான் கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

சீனா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

இந்தியா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பாசிச அரசாக இன்று ராஜபக்ச அரசு இருக்கிறது. இந்த வெறிபிடித்த ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ இந்திய மத்திய அரசு துணை நிற்பதை தமிழ்நாட்டிலே இருக்கும் எவரும் விரும்பவில்லை - அங்கீகரிக்கவில்லை - ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இங்குள்ள வருந்தத்தக்க செய்தி என்னவெனில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12 கோடி கைகளும் ஈழத் தழிழர்களின் துயர்துடைக்க தயாராக இருந்தாலும் இங்கு அவரவர் சுயநலம் சார்ந்து சிந்திக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாத அளவுக்கு அவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வரவிருக்கும் தேர்தலில் யார் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் நீங்கள் நெஞ்சம் புண்ணாகிப் போவீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக இன்று சொல்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது. வீதி வீதியாக கூட்டம் நடத்துவதும் பேரணி நடத்துவதும் மனிதச் சங்கிலி நடத்துவதுமாக ஈழத் தமிழருக்காக ஆதரவான ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது.

ஆனால் எந்த மத்திய அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறதோ அந்த மத்திய அரசே இதுவரை அது குறித்து சிறிதும் கவலைப்படாத நிலையில் - அந்த மத்திய அரசை இயக்குகின்ற, தலைமை தாங்குகின்ற காங்கிரசோடு எப்படியாவது தன்னுடைய தேர்தல் கூட்டணியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிறது - தவிக்கிறது - தவமிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

எந்த நிலையிலும் ஈழத்தமிழர்களின் நலனைப் புறக்கணித்து விட்டு தமது சுயநலனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அளவில் காங்கிரசோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. இது ஒரு பக்கம்தான்.

அதேநேரம் உலகத் தமிழர்களின் உரத்துக் குரல் கொடுக்கும் வைகோ. சென்னைக்கு பிராணப் முகர்ஜி வந்தபோது கறுப்புக் கொடி காட்டி சிறை சென்று வெளியே வந்திருக்கிறார், உலகத் தமிழர்களுக்காக ஓங்கிக்குரல் கொடுக்கிறார், ஈழத் தழிழர்களுக்காக அவர் மிகப் பெரிய அளவுக்கு போராடுகிறார், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்காக தான் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார் என்று கூறுகிறார். அவரது தமிழின உணர்வு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அதேநேரத்தில் முழுக்க முழுக்க தமிழின உணர்வு அற்றவராகவும் தமிழினத்திற்கு விரோதியாகவும், ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதில் ராஜபக்ச அரசுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு கொடுப்பவராகவும் இருக்கின்ற ஜெயலலிதாவின் பக்கமாக போய் நின்று குறைந்தது ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளைப் பெற்று அதில் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக வைகோ மேற்கொள்ளும் அரசியல் சமரசம் இருக்கிறதே அது மிகவும் பரிதாபகரமானது - வருந்தத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் இராமதாஸ் காலையில் இருந்து மாலை வரை ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார் - குரல் கொடுக்கிறார். ஆனால் இன்றைக்கும் அவரது பிள்ளை மத்திய அரசில் தான் இடம்பெற்றிருக்கிறார். காங்கிரசிலிருந்து அவர் வெளியே வரவில்லை. அவரின் கட்சி மீண்டும் காங்கிரசோடும் திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் கூட்டணி அமைக்க மறைமுகமாகப் பேச்சு நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் அணி திருமாவளவன் தலைமையில் இயங்குகிறது. பிரபாகரனை 1980 தொடங்கி நான் நேசிப்பவன், பிரபாகரனின் அன்புக்குரியன் என்று சொல்கின்ற திருமாவளவன் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி தொடரும் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்றால் யாருடன் கூட்டணி? காங்கிரசுடன் சேர்ந்துதானே கூட்டணி. திருமாவளவனை சிறைக்குள் தள்ள வேண்டுமென காங்கிரஸ் கூறுகிறது, தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

எனினும் அவரை கைது செய்யாமல் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் இருந்தால்தான் தேர்தல் நேரத்தில் தனக்கு பலம் கிடைக்கும் என்று கருணாநிதி நம்புகிறார். எனவே ஒரு பக்கத்தில் விடுத்தலைச் சிறுத்தைகளுக்கும் இன்னொரு பக்கத்தில் சோனியா காந்திக்கும் பாலமாக கருணாநிதி இருக்கின்றார்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியைப் பெற்று அதில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக சோனியா காந்தியின் உறவை திருமாவளவனால் ஏற்றுக்கொள்ள முடிகிறது எனில் -

தமிழ்நாட்டில் நெடுமாறன் என்கிற ஒரு மனிதனைத் தவிர ஈழத்தமிழர்களுக்காக, புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு பாடுபடுகிற ஒருதலைவர் இந்த தமிழ்நாட்டில் இல்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறிவைக்கிறேன். காரணம் நெடுமாறனுக்கு அரசியல் நிர்ப்பந்தம் இல்லை.

அரசியல் கடந்து நிற்கக்கூடிய அத்தனை பேரும் ஈழத் தமிழர்களுக்காக உண்மையாகப் போராடுகிறார்கள். ஆனால் அரசியல் அரங்கத்திற்குள்ளே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழர்களை வைத்துக்கொண்டு தங்களது அரசியல் நாடாகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நம்மை ரணப்படுத்துகிற கசப்பான உண்மை.

தாயகத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் இந்த நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தமிழக மக்களா அல்லது அரசியல் தலைவர்களா?

இன்றல்ல என்றுமே ஆதரவாக இருப்பவர்கள் மக்கள்தான். ஆனால் மக்களைக் குழப்புகின்ற வேலையைச் செய்துகொண்டு இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.

ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போட்டர், ஆனந்த விகடன் மற்றும் மேடைப் பேச்சுகளில் நான் திரும்பத்திரும்ப வலியுறுத்துவது என்னவெனில் - ஈழத் தமிழர்களின் நலனைக் காக்க வேண்டுமென நீங்கள் உண்மையிலேயே ஆசைப்பட்டால், தமிழகத்து மக்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினால், எல்லாக் கட்சி தலைவர்களும் கட்சி மாற்றங்களை மீறி, கருத்து வேறுபாடுகளைக் கடந்து தமிழின உணர்வொடு ஒரே குரலாக நீங்கள் முழங்குங்கள் - ஓரணியில் நில்லுங்கள்.

காங்கிரஸ் என்பது இன உறுதிப்பற்றற்ற சுயநலவாதிகளின் கூடாரமாக தமிழகத்தில் தன்னிலை தாழ்ந்து விட்டது என்பதை நாற்பதாண்டு காலம் தமிழகத்து அரசியலில் பெருந்தலைவர் காமராஜரின் காலம் தொட்டு இன்றுவரை காந்திய வழியில் நெறி சார்ந்து - நேர்மை தவறாது - நேர்கோடாய் நடந்த நான் அந்த கட்சியின் மூலமாக இனிமேல் இனப்பற்றையும், மொழிப்பற்றையும் வளர்த்தெடுக்க முடியாது என்ற உண்மையின் அடிப்படையிலேதான் அந்த கட்சியை விட்டே வெளியே வந்திருக்கிறேன்.

தமிழகத்தை பொறுத்த வரை என்ன செய்ய வேண்டும். ஜெயலலிதா இன உணர்வு அற்ற ஒரு பெண்மணி. ஜெயலலிதாவின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் உருவாக்கிவிட முடியாது. அதேநேரம் அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி என்பது கடந்த மூன்றாண்டு காலமாக ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாக எல்லா வகையிலும் துணைநின்று இன்று எனது தமிழினம் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படுகிற இழி நிலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

எனவே, அந்த காங்கிரஸ் அது யாரோடு கைகோர்த்து வந்து நின்றாலும் நாற்பது தொகுதிகளிலும் அது முற்றாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவும் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு தமிழர்களுக்கு இருக்கிறது. வாக்காளர்களுக்கு இருக்கிறது.

அந்த வாக்களர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டுமெனில் சூழ்நிலையில் தெளிவிருக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும் ஜெயலலிதாவும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கட்டும். கருணாநிதிக்கு நான் அதையே மீண்டும் மீண்டும் கூறினேன்.

காங்கிரசை கைகழுவி விடுங்கள் என்றேன். நீங்கள் கைகழுவி விட்டால் காங்கிரஸ் அடுத்த கணமே ஜெயலலிதாவிடம் போய் நிற்கும். ஜெயலலிதாவும் காங்கிரசும் சேர்ந்து தமிழின விரோதக் கூட்டணியை உருவாக்குவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருக்கும் இடதுசாரி இயக்கங்கள் அங்கிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகப் பக்கமாக வருவார்கள்.

எனவே திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் என்று மிக வலிமையான கூட்டணி அமைக்க முடியும். அரசியலுக்கு பின்னாலுள்ள தமிழின உணர்வாளர் அமைப்புக்கள் அனைத்தும் இந்த கூட்டணிக்கு பின்னாலே நிற்கும். எனவே மிகப்பெரிய கூட்டணியை இது உருவாக்க முடியும். இது தமிழின உணர்வை வெளிப்படுத்துகின்ற கூட்டணியாக இருக்கும்.

காங்கிரசும் ஜெயலலிதாவும் சேர்ந்து தமிழின எதிர்ப்பு கூட்டணியாக இருக்கின்ற போது வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டோடு வரும் வாக்காளனுக்கும் ஒருதெளிவு இருக்கும். இது தமிழினத்தின் நலன் காக்கும் கூட்டணி, இது தமிழினத்தை வேரறுக்கும் கூட்டணி என்ற தெளிவான சிந்தனையோடு அவன் வாக்களிப்பான்.

ஆனால் இன்றுள்ள சூழ்நிலை எப்படி? கலைஞர் காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். வைகோ ஜெயலலிதாவுடன் கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத்திற்காக கண்ணீர் வடிக்கின்றார். இராமதாஸ் ஜெயலலிதாவுடன் போவதா, கலைஞருடன் போவதா என்று இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கலைஞரைக் கைவிடுவதாக இல்லை.

ஈழத் தமிழர்களை பற்றி பேசும் இவர்களே இப்படி அணி பிரிந்து நின்றால் இதில் எந்த அணி ஈழத் தமிழர்களுக்காக உண்மையாக இருக்கும் அணி என்று மக்களுக்கு தெளிவு வரும்? யாருக்கு வாக்களிப்பது என்று அவர்கள் எந்த நிலையில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்?

மக்கள் இங்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழீழம் கிடைப்பதுதான் தீர்வு என்றால் அந்த தீர்வும் உருவாகட்டும் என்று இங்கிருப்பவர்கள் வேள்வி நடத்துகிறார்கள். ஆனால் இன்று அந்த வேள்வித் தீயை அணைப்பதிலும் அழிப்பதிலும் அவரவர் கட்சி நலன் கருதி - அவரவர் சொந்த நலன்கருதி - அவரவர் பதவிகளுக்காக - அவரவர் சுகங்களுக்காக இன்று அரசியலையும் குழப்பி, அதன் ஆரோக்கியத்தையும் கெடுத்து, இன உணர்வை அழித்து ஒட்டுமொத்தமாக மக்களிடையே இன விரோதிகளாக அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.

அரசியல் சாணக்கியன் என்று கருதப்படும் முதல்வர் கருணாநிதி எதற்காக இப்படியான ஒரு அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு பின்நிற்கிறார்?

"ஒரு இராஜதந்திரி தன்னுடைய அதிகபட்ச இராஜதந்திரத்தாலேயே அழிந்து விடுகிறான்." கலைஞரும் தமிழ் மக்களை மனதில் நிறுத்தினால் இந்த கூட்ணியை உருவாக்குவதற்கு அவர் முனையலாம். ஆனால், கலைஞருக்கு வைகோவின் மீது கோபம். வைகோவுக்கு கலைஞரின் மீது கோபம். வைகோவுடன் இருக்கும் கோபத்தை தணித்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் கலைஞர் வைகோவுடன் கரம் கோர்த்து நிற்க தயாராக இருப்பார். அது எனக்கு தெரிந்த விடயம்.

ஆனால் கலைஞர் போடும் கணக்கு என்னவெனில் தமிழகத்தில் காங்கிரசுக்கு மிகப்பெரிய ஆதரவு இல்லாமல் போனாலும் ஓட்டுமொத்த இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தலில் எதிர்பார்த்தது போல வெற்றியைப் பெறத் தவறியதால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமென்று கலைஞர் கணக்குப் போடுகிறார்.

எனவே காங்கிரஸ் தலைமையில் மீண்டும் மத்தியிலே கூட்டணி அரசு வருமானால் அந்த கூட்டணியில் தன்னுடைய அரசும் வரவேண்டுமென கலைஞர் விரும்புகிறார். மீண்டும் ஆறு அல்லது ஏழு அமைச்சர்கள் மத்தியிலே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தனது குடும்ப நலனிற்கும் கட்சி நலனிற்கும் உகந்ததாக இருக்கும் என்பது கலைஞருடைய கணிப்பு.

இதற்கு மாறாகு அவர் கணக்கு போட்டு தமிழகத்தில் அவர் வெற்றிபெற்றாலும் கூட ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் அடுத்த நிமிடமே கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும். காங்கிரஸ் ஆட்சியை திரும்ப பெற்றுக்கொண்டால் கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்பது வரலாற்று உண்மை. அதனை மறுக்க முடியாது.

அத்துடன், கலைஞரின் குடும்பத்திற்கு ஓராயிரம் தொல்லைகள் ஜெயலலிதாவின் மூலமாக உருவாகக் கூடும். எனவே ஜெயலலிதா எந்த சந்தர்ப்பத்திலும் சோனியா காந்தியின் பக்கத்தில் போய் நின்றுவிடக் கூடாது என்றே கலைஞர் நினைக்கிறார். ஜெயலலிதாவின் சக்தி இந்திய அரசியலிலே வலுப்பெற்றுவிடக்கூடாது, மத்திய அரசில் ஜெயலலிதாவைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றுவிடக் கூடாது, எனவே கலைஞரின் எல்லா கவலைகளும் போயஸ் தோட்டத்தை சுற்றித்தான் அமைந்திருக்கிறது. ஜெயலலிதாவின் எல்லா பார்வைகளும் கோபாலபுரத்தை சுற்றித்தான் இருக்கிறது. எனவே கலைஞர் ஜெயலலிதாவை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. ஜெயலலிதாவும் கலைஞரை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை.

தமிழ்நாட்டை பொறுத்த வரை தமிழகத்தின் விதி மட்டும் நிர்ணயிக்கப்படும் சூழல் இருக்குமானால் சாணக்கியராக இருக்கும் கலைஞருக்கு தெரியாமல் இல்லை. கலைஞர் நிச்சயமாக இப்படியான வலுவான கூட்டணியை அமைப்பார், தமிழினத்திற்காக குரல் கொடுப்பார், "வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழினமாக இருக்கட்டும்" என்று சொல்வார். இருப்பது ஒரு உயிர் அது போகப் போவதும் ஒரு முறைதான் என்று மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை வெவ்வேறு இராகங்களில் பாடுவார், உணர்சியை தூண்டுவார், வெற்றிக் கனியை சுவைப்பார். ஆனாலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த கூட்டணியில் நின்று தான் விலகி நின்றது பிழையாகிவிடுமே என்ற அச்சம்தான் அவரை காங்கிரசில் இருந்து வெளியேவராது பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனைத்துலகத்தில் இருந்து தமக்கு சார்பான ஒரு ஆதரவு நிலை வருமென்று ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படியானால் அந்த எதிர்பார்ப்பு தவறானதா?

அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. காரணம் அவர்கள் நமது தொப்புள் கொடி உறவு. எனவே இந்த தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகள் தமது அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் மத்திய அரசுக்கு கொடுத்தால் -

அந்த மத்திய அரசு முன்னின்று முனைப்பாக உலக நாடுகளின் கருத்துக்களை எல்லாம் திரட்டி, ராஜபக்ச அரசுக்கு எதிராக அணிவகுக்கச் செய்தால் -

நிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு சரியான ஒரு தீர்வு கிடைக்கும். அந்த நம்பிக்கை பிழை இல்லை. அது மிகச் சரியான நம்பிக்கை. அந்த நம்பிக்கை நிறைவே வேண்டும் என்றால் இந்திய அரசு உடனடியாக காரியமாற்ற வேண்டும். இந்திய அரசு காரியமாற்ற வேண்டுமெனில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இருந்து தெரிவு செய்யப்படும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கட்சிகளை மறந்துவிட்டு ஈழத் தமிழர் குறித்த நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும். இவ்வளவும்தான். இதில் ஒரு இரகசியமும் இல்லை.

எனவே இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இனநலன் சார்ந்து தெரிவு செய்வதற்கு தமிழகத் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் இந்த கூட்டணிக் குழப்பங்களில் இவர்கள் மாறிமாறி முகம் காட்டினால் யாரை பார்த்து எப்படி வாக்களிப்பது?

எனவே தேர்தல் வரட்டும். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் நான் தெளிவாகச் சொல்கிறேன் தமிழகத்தில் இருக்கும் நூற்றுக்கு தொண்ணூறு சதவீத மக்கள் தேர்தலுக்கு பின்னாலும் ஈழத் தமிழர்களின் இன்னலை துடைப்பதற்கு, ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதற்கு தொடர்ந்தும் போராடுவார்கள்.

தமிழகத்தை பொறுத்த வரையில் ஈழத்திற்கு உறுதுணையாக நிற்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கும். அந்த நம்பிக்கையோடு இருக்கலாம் நீங்கள். புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் எனது தமிழினச் சகோதரர்களே என் இன மக்களே! உங்களை தமிழன் ஒருபோதும் கைவிட மாட்டான். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். இங்குள்ள அரசியல்வாதிகளை ஒருபோதும் நம்பாதீர்கள். ஆனால் அரசியலுக்கு அப்பால் இந்த இனம் ஒன்றுபட்டு நின்று ஈழத்தமிழர்களை ஆதரிக்ககூடிய சூழல் நிச்சயம் விரைவில் வரும்.

ஈழத் தமிழர்கள் தங்களுக்காக இந்த அரசியல்வாதிகள் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

கலைஞர் ஒருநாள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் அன்பு கூர்ந்து அவரிடம் "அய்யா நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுங்கள்" என்று கூறினேன். நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினால் தேசிய அளவில் மிகப்பெரிய அழுத்தம் உருவாகும். அப்போதுதான் ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு விரைவாக காரியமாற்றும் என்று கூறினேன்.

மகுடங்கள் என்பவை இடம் மாறக்கூடியவை. இன்று ஒரு தலையில் இருக்கக்கூடிய மகுடம் நாளை இன்னொருவர் தலைக்கு தானாக இடம் மாறலாம். ஆனால் புகழ் மகுடம் ஒன்றை ஒருவன் உருவாக்கிக்கொண்டால் அது என்றும் அவனையே அலங்கரிக்கும்.

எனவே இடம்மாறக்கூடிய மகுடங்களைக் பற்றி கவலைப்படாது தமிழினத் தலைவர் என்ற புகழ் மகுடம் உங்கள் தலையில் என்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக உங்களது முதல்வர் பதவியை விட்டு விலகுங்கள் என்று அவரிடம் தொலைபேசியில் கூறினேன்.

அதன் பின்னர் கலைஞர், வைகோ, திருமாவளவன், இராமதாஸ் ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்து தமிழர் நலனுக்காவது நீங்கள் ஓரணியாக நின்று ஒன்றுபட வேண்டுமென்று சொல்வதற்கு முயன்றேன். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. காங்கிரசை நோக்கி திராவிட முன்னேற்ற கழகம் சென்று விட்டது. ஜெயலலிதாவை நோக்கி வைகோ சென்றுவிட்டார். இனிமேல் இவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

என்னைப் பொறுத்தவரை நான் தனியாளாகச் சென்று என்னுடைய கருத்துக்களை சொல்லி வருகிறேன். தமிழக மக்கள் அனைவரும் அரசியல் சார்ந்து சிந்திக்காமல் இந்த அரசியல் வாதிகளின் முகமூடிகளைக் கழற்றி அவர்களின் சுயமுகங்களைப் பாரத்து அவர்களிடம் இருந்து விலகி நின்று ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக ஆதரவுக் குரல்கொடுக்க நீங்கள் அத்தனை பேரும் இணைய வேண்டும் என்று நான் முனைப்பளவில் போராடிக் கொண்டிருக்கிறேன். என்னளவில் என்னால் இதனைத்தான் செய்ய முடியும்.

இராமன் சேது மண்டலம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு அணில் மணல் சுமந்தது. அணில் சுமக்கின்ற மணலில் பாலமாகி விடாது என்பது அணிலுக்கு தெரியும். ஆனாலும் அதன் பங்களிப்பை அதன் மனச்சான்றுக்கு மாறில்லாமல் அது செய்தது போல் நான் செய்து கொண்டிருக்கிறேன் - என்று அந்த நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.

நன்றி-புதினம் தமிழ் செய்தி

Thursday, March 5, 2009

ஈழ தமிழர் விவகாரம் -தேர்தல் -குமுதம் சூப்பர் கார்டூன்

c
ஈழ தமிழர் விவகாரம் பற்றியும்,தேர்தல் விவாகரம் பற்றியும் குமுதம் அருமையாக விமர்சன கார்டூன் வெளியுட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலால் ஈழதமிழர் மீதான கொடுமைகள் மறக்கடிக்கபடலாம் /மறைக்கபடலாம் ....

இந்த சத்தத்தில் அந்த ஈன குரல் சத்தம் கேட்காமல் போய்விடுமோ...
சகோதரிகள் கற்பு ...காட்டு பண்ணிகளால் அசிங்க படுமோ ...கல்யாண
கச்சேரியில் எளவு துக்கம் தெரியாதோ .....
ஏன் அருமை தமிழா ....
இந்த அரசியல்வாதிகளின் வேடிக்கைகளை பார்க்கத்தான் உன் தொப்புள் கோடி உறவுகள் ஆளாய் பறக்கும் ...என் செய்வாய் ...
வேடிக்கை பார்ப்பதை முதல் மூச்சாய் கொண்ட தமிழன் பற்றி தெரிந்து
இராணுவம் கொஞ்ச நஞ்ச தமிழனையும் கூறு போட போகிறது ..
நாடாளுமன்ற முடிவு தெரியும் போது..இலங்கை தமிழனின் முடிவும் சேர்ந்து அறிவிக்கப்படுமோ ......

Monday, March 2, 2009

விவேகானந்தர் இறப்பு ரகசியங்கள்


பிறந்த இடமும்.. செத்த இடமும் ,
சாவாதிருக்கும் வழியும் ....தெரியாத
அறிவு என்ன அறிவோ ?
-மாணிக்க வாசகர் .



சமீபத்தில் ,ஒரு திருமண மண்டபத்தில் ஆன்மீக கூட்டம் நடந்தது .
தலைப்பு -மரணத்தை வெல்லும் வழிகள்...
வித்தியாசமான தலைப்ப்யு.மனிதன் சாகாமல் வாழமுடியுமா.அதற்க்கு ஒருவர் கற்று தருகிறாரா?என ஆச்சர்யமுடன் சென்றேன்.

அந்த ஆன்மீகவாதியின் பெயர் ,ஞான தேவ பாரதி சுவாமிகள் .பழனியில் ஆசிரமம் அமைத்து உள்ளார் .பணம் சம்பாதிப்பதில்லை.தன் ஆசிரமத்தில் யாருக்கும் அனுமதிப்பதில்லை .தனது ஆன்ம பயிற்சிக்கு அந்த ஆசிரம த்தை பயன்படுத்துகிறார் .

மரணத்தை வென்றவர்.சிவ தரிசனம் கண்ட ஞானி என்று சொல்கிறார்கள் .
இருபது நாட்கள் மலம் ஜலம் கழிக்காமல் பத்துக்கு பத்து இருட்டு அறையில் ஆன்ம பயிற்சி செய்தவர் என்கிறார்கள்;

  • அவர் உரையிலிருந்து முக்கியமான கருத்துக்கள்;
  • மனிதனின் விந்து வீண் ஆனால் விழி ஒளி போகும் ;நல்லது கெட்டது அறியும் புத்தி போகும் ;
  • ஆஞ்சநேயர் -அணுவின் ஆற்றலை உணர்ந்த மகான் .அணு ஆற்றலைமுதன் முதலில் பயன்படுத்தியவர்.விந்தாற்றல் தனை கட்டி வின் அதிர செய்தவர்
  • தேகத்தை பொன் ஆக்கினால் நீ கை பட்ட தெல்லாம் பொன் ஆகும் ;
  • அஞ்சாதிருந்தால் ஆயுள் வளரும் .
  • மகான்கள் விதியை மீறி நம்மை காப்பர் .தெய்வம் விதியை மீறுவதில்லை ;
  • விவேகானந்தர் கடைசி வரை மாமிசம்,புகை பழக்கத்தை விடமுடியாமல் ,நீரிழிவு வந்து இறந்தார் ;
  • தெய்வம் -சிறு நெறி வழிபாடு ;
  • மகான்கள்-பெருநெறி வழிபாடு ;
  • வயதாகி கண்கள் நீர் வற்றி ,யார் எதிரில் நின்றாலும் கருப்பு வட்டம் மட்டுமே தெரியும் ;இதுவே யமன் நிற்கிறான்.வந்துவிட்டான் என சிலர் மரண தருவாயில் கத்துவார் ;இருள் தான் எமன் வாகனம் .இதனால் எருமையை குறிக்கிறோம் .
  • சாவை தீர்த்தவர் தான் சாதித்தார் .சாதனை என்பதும் சாவை வென்றவரையே குறிக்கும் சொல் ஆகும் ;சாவுக்கு உரிய தீ சாதி .;
  • மரணமில்லா பெருவாழ்வு வாழ முடியும் என சத்தியம் சொல்கின்றேன் என்றார் வள்ளலார் .அதை பற்றி யாரும் அக்கறை கொள்ளவோ ,ஆய்வு செய்து அவர் சொல்படி வாழ்வை அமைத்து கொள்ளவோ யாரும் விரும்ப வில்லை .;
  • ஆன்மாவை சமாதானபடுத்தி இறை நிலை புரிய வைப்பதே ஆன்மிகம் ஆகும் .
  • மாணிக்க வாசகர் ஆன்மாவை நேசித்தார் வள்ளலார் .படம் வைத்து வணங்க வில்லை ;
  • ஆலய வழிபாடு செய்தவர்கள் யாரும் மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்ததில்லை ;
  • மனம் அடிமையாகும்,திருட வைக்கும்,நடிக்க செய்யும் -ஆக ஆன்மீகத்திற்கு உதவாது; ஆன்மா நிலையானது .ஆன்மாவையும் ,மனதையும் ..ஜீவ காருண்யம் (பிற உயிர்களை தன் உயிராய் நேசிப்பவர் )மாத்திரமே பிரித்து புரிந்து கொள்ள இயலும் .

Sunday, February 22, 2009

இலங்கை தமிழர்களுக்கு கிளஸ்டர் குண்டுகளால் ஏற்படும் ஆபத்து -ஆனந்த விகடனின் கட்டுரை

ஆஸ்கார் -ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த தமிழர் ஏ.ஆர்,ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் .இரு தினம்ங்களுக்கு முன்பு கொழும்பில் எதிரிகளுக்கு இரண்டு விமானங்களில் பறந்து தமிழன் ,துன்ப அதிர்ச்சி கொடுத்தான் .இன்று ஒரு தமிழன் இரண்டு உயரிய விருதுகளை வாங்கி இன்ப அதிர்ச்சி அளித்தான் ..
அதே சமயம் இந்த கொண்டாட்டத்தில் ..இலங்கை தமிழரை யாரும் மறந்து விடாதிர்கள் .ஏனெனில் கனபோளுதில் நூறு பேரை கொன்று கொண்டிருக்கிறார் ராஜ பக்சே.
அதை பற்றிய விகடன் கட்டுரை.படியுங்கள் /
நன்றி -ஆனந்த விகடன்