Sunday, February 22, 2009

இலங்கை தமிழர்களுக்கு கிளஸ்டர் குண்டுகளால் ஏற்படும் ஆபத்து -ஆனந்த விகடனின் கட்டுரை

ஆஸ்கார் -ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த தமிழர் ஏ.ஆர்,ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் .இரு தினம்ங்களுக்கு முன்பு கொழும்பில் எதிரிகளுக்கு இரண்டு விமானங்களில் பறந்து தமிழன் ,துன்ப அதிர்ச்சி கொடுத்தான் .இன்று ஒரு தமிழன் இரண்டு உயரிய விருதுகளை வாங்கி இன்ப அதிர்ச்சி அளித்தான் ..
அதே சமயம் இந்த கொண்டாட்டத்தில் ..இலங்கை தமிழரை யாரும் மறந்து விடாதிர்கள் .ஏனெனில் கனபோளுதில் நூறு பேரை கொன்று கொண்டிருக்கிறார் ராஜ பக்சே.
அதை பற்றிய விகடன் கட்டுரை.படியுங்கள் /
நன்றி -ஆனந்த விகடன்

Wednesday, February 18, 2009

முகத்தில் அறையும் முல்லை தீவு கடிதம் -ஜுனியர் விகடன் இன்று

ஜுனியர் விகடன் இன்றைய இதழில் இலங்கை தமிழர் செய்திகள் அதிகம் காணப்பட்டன. சீமான் பேட்டிசிறப்புடன் இருந்தது.
அதைவிட இலங்கை தமிழர்கள் பலர் ராணுவத்தை நம்பி புலிகள் கட்டுபாட்டு பகுதியை விட்டு வெளியேறிய பொது என்ன நடந்தது என்பதை விவரிக்கும் ஒரு முல்லை தீவு கடிதம் கண்களை குளமாக்குகிறது ....]


Tuesday, February 17, 2009

இந்தியா கோழை நாடா ?


இந்திய பண்பாடு தொன்மையானது .இந்திய பெண்கள் கலாசாரம் நிரம்பியவர்கள் ,ஒழுக்கம் நிறைந்தவர்கள் .,இந்தியர்கள் சுறுசுறுப்பு உடையவர்கள் ,இந்திய கோவில்கள் கலை நுணுக்கம் உடையவை ,இந்திய மக்கள் அன்பு நிறைந்தவர்கள் ..
இதெல்லாம் சரி .ஆனால் இந்தியா வீரம் மிக்க நாடா ?
இந்த கேள்விக்கு பதில் உண்டா ?

இதென்ன கேள்வி ?கார்கில் யுத்தத்தில் எதிரிகளை ஓட ஓட விரட்டினோமே என்கிறீர்களா?

அது இல்லை .எதிரிகள் வந்த பின் பாதி அளவுக்கு உள்ளே நுழைந்து ,ஒரு வழி செய்த பின்னர் ,எதிர் தாக்குதல் நடத்தி முக்கி திணறி அவர்களை அவர்கள் எல்லைக்கு தள்ளுவதற்கு பெயர் வீரமா ?

அல்லது முன்கூட்டியே யூகம் செய்து ,அவர்களை எச்சரித்து ,அதன் பின்னரும் அவர்கள் வாலாட்ட நினைத்தால் வாலைஓட்ட நறுக்குவது ..அதுவும் நம் நாட்டுக்குள் நுழையும் முன்னரே செய்வது வீரமா ?

அய்யா ..ஜனநாயகம் என்பதும் ,அமைதியுடன் இருப்பதும் , தாக்குதல் நடத்தி பேரிழப்பு செய்த பின்னரும் ,சொரணை கெட்ட தனமாகஅவர்களை ஏதும் செய்யாமல் ..இந்திய அமைதிக்கும் ஒரு எல்லை உண்டு என ஓராயிரம் தடவை தேஞ்சு போன ரெக்கார்டு போல சொல்லி கொண்டிருப்பதன் பெயர் ,
ராஜ தந்திரமா ?

ஈராக் ..எப்போதாவது அணு ஆயுதத்தால் தாக்குமோ என சந்தேகப்பட்டு ,அதன் அதிபரையே தூக்கில் ஏற்றியவர்கள் அமெரிக்கர் கள்...
அட..நீங்க அது மாதிரி செய்ய வேண்டாம்... மும்பை தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாத கூடாரங்கள் மீது கூட தாக்குதல் நடத்தவில்லை என்றால் எப்படி ?

இதை எச்சரிக்கை செய்து கொண்டே காலம் கடத்தும் அரசியல்வாதிகள் ராஜ தந்திரம் என்கிறார்கள் ...
அரசியல்வாதிகள் கோழையாக இருக்கட்டும் ..அதற்காக கடும் பயிற்சி கொடுக்கப்பட்ட வீரர்களையும் முக்கியமான நேரத்தில் பயன்படுத்தாமல் துரு பிடிக்க செய்வது ஏன் ?
ஐந்தாயிரம் எதிரிகளின் கூடாரங்கள் குறி வைத்துள்ளோம் .ஒரே நேரத்தில் ,நிமிடத்தில் அத்தனையும் அழிப்போம்..எங்களுக்கு தேவை உத்தரவு மட்டுமே ..!

என ராணுவ தளபதி உற்சாகமுடன் ,வீரமுடன் பலமுறை கூறினார் ..செவி மடுக்க ஆள் இல்லை ...

தலிபான்களால் இந்தியாவிற்கு பெரிய ஆபத்து ஏற்பட போவதாக ,அமெரிக்க வெளியுறவு செயலர் எச்சரிக்கை செய்துள்ளார் .கவலை தரும் இந்த செய்தியையும் எருமை மேல் பெய்த மழைபோல தான் பாவிக்க போகிறார்கள் ..

இந்திய சொரணை தெரிந்து தான் ..ராஜபக்சே.., ஐ.நா உட்பட எந்த நாடு சொன்னாலும் தமிழர் மீது தாக்குதல் தொடரும் என கொக்கரிக்கிறார் ...

வீரமற்ற எந்த நாடும் முன்னேறாது என திருவள்ளுவர் அறத்துப்பாலில் கூறுகிறார் ..
பெண் தலைமை ஆட்சி பெண்மை தனமாகத்தான் இருக்குமோ ...ஜெ வைஇந்த லிஸ்டில் சேர்த்த இயலாது .அவர் எந்த விசயத்தையும் திசை திருப்புவதில்லை .
அதை கூர் மழுங்க செய்வதில்லை ...

Monday, February 16, 2009

இலங்கை பிரச்சனை -சந்திராயன் தான் காரணம்

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணம் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் விண்கலமே காரணம் ஆகும் .

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை மனிதனின் உடலுக்கு காரணகர்த்தாவகவும் ,மனதுக்கு அதிபதியாகவும் பார்க்கிறோம் .அந்த சந்திரனில் தமிழன் தலைமையில் அனுப்பப்பட்ட ,சந்திராயன் விண்கலம் சந்திரனில் அதிர்வுகளை உண்டாக்கியதால் ...தமிழர்களை உணர்வு பூர்வமாக தாக்கியது .சந்திரன் மனோகாரகன் அல்லவா .

சந்திராயன் திட்ட இயக்குனர் ஒரு தமிழர் என்பதால் தமிழர்களை தாக்கியது .இதனால் தற்கொலை நிகழ்ச்சிகள் தொடர்கதை ஆகி விட்டது .இலங்கை தமிழர்கள் கொடூரமாக தாக்கப்படுவது கண்டு மனம் பொறுக்க முடியாமல் ,வாழ முடியாத மேன்மை மனம் கொண்டோர் இவர்கள் /

ஏற்கனவேகோள்சாரபடிகுரு மகரத்தில் நீசம் ஆனதால் .. (நீசம் என்பது சக்தி இல்லாமல் போவது )

குரு செல்வத்துக்கு அதிபதி என்பதால் உலகில் பொருளாதார தாழ்வு உண்டானது . நல்லதை எடுத்து சொல்ல ஆள் இல்லை என்றால் ..கெட்டவன்ஆட்டம் அதிகமாகுமே அது போல ..நடக்கிறது ராஜ பக்சே அரசு .

முத்துகுமார் ,முருகதாசன் போன்ற தமிழ் கடவுள் முருகன் பெயர் கொண்டவர்கள் தற்கொலை செய்து உலகை இலங்கை பக்கம் திரும்ப வைத்துள்ளனர் ..

சூரா பத்மனை அழித்தவர் முருகன் .முருகன் பெயர் உடையவர்கள் மனம் பொறுக்காது தன்னுயிரை தந்து உலகை திரும்பி பார்க்க வைத்ததில் ஆச்சர்யம் என்ன ?
பழனி பாத யாத்திரையாக சென்று தமிழ் கடவுள் முருகனிடம் ..சூரா பத்மன் ராஜ பக்சே வை நல்ல புத்தி தருமாறு வேண்டுவோம் .

இனி ஜெய் ஹிந்த் என்று சொல்லாமல் தமிழ் வாழ்க என சொல்லுவோம்





Saturday, February 14, 2009

தமிழகத்துக்கு ஆபத்து: ராமதாஸ்-பதட்டம்


.

தமிழகத்துக்கு ஆபத்து: ராமதாஸ்

திண்டிவனம், பிப். 14: சென்னையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உளவுப்படையினர் ஊடுருவி யிருப்பதாகவும், இதனால் தமிழகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருப்ப தாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்திருக்கிறார்.
.
இலங்கையில் உடனே போர் நிறுத்தம் செய்ய கட்டளையிடுமாறு சோனியா காந்தியிடம் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டிருக்கிறார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலா புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
இலங்கையில் இருந்து ஒற்றர்களும், கைக்கூலிகளும் தமிழகத்துக்கு, சென்னை நகருக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதுபற்றி நான் தகவல்களை தெரிவித்து தமிழக காவல்துறை விழிப்புடன் கண்காணித்து செயல்பட வேண்டும் என்று உஷார்படுத்தியிருக்கிறேன்.

ஜி.கே. மணியும் இது குறித்து சட்டசபையில் அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். ஆனால் தமிழக அரசும் காவல்துறையும் இதில் இன்னமும் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இலங்கையில் இருந்து வந்துள்ள இவர்கள், இலங்கை அரசின் ஆதரவோடு ராஜ மரியாதையுடன் இங்கே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையில் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு எதிரே உள்ள இலங்கை புத்தமத கோயில் இத்தகைய ஒற்றர்களுக்கு தஞ்சமளிக்கும் களமாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது.

இலங்கை ஒற்றர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ஒற்றர்படையான ஐஎஸ்ஐ ஏஜென்ட்டுகளும் அங்கு தனி அலுவலகம் வைத்து செயல்படு வதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் அலுவலகத்திலும் அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமான அலுவலர்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது. இதுபற்றியெல்லாம் தமிழக காவல்துறையின் உளவுப்படை தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு நடத்துவதுடன், அத்தகையவர்களை நாடு கடத்த வேண்டும். இத்தகைய ஊடுருவல்களால் தமிழகத்தில் இலங்கை தமிழர் நலனுக்காக குரல் கொடுத்துவரும் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்க வேண்டும். பாகிஸ்தான் ஒற்றர்படையினர் சென்னையில் மட்டுமின்றி கோழிக்கோடு, பெங்களூர் ஆகிய இடங்களில் இலங்கை பாஸ்போர்ட்டுடன் தங்கியிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இலங்கை தமிழர் பிரச்சனை கட்சி பாகுபாடின்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பு உறுப்பினர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள். இதில் மத்திய அரசின் கடமை பற்றியும் வலியுறுத்தியிருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கார்வேந்தன், என்.எஸ்.வி. சித்தன், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை.

இந்த அளவுக்கு இலங்கை தமிழர் பிரச்சனை, நாட்டின் தேசிய பிரச்சனையாக அனைத்து கட்சியினரும் கவனம் செலுத்தும் முக்கிய பிரச்சனையாக மாறியிருப்பதற்கு பாமக எம்பிக்கள் மேற்கொண்ட முயற்சி முக்கியகாரணமாகும்.
தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதோடு நின்றுவிடாமல், காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள் ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து இலங்கையில் போரை நிறுத்தும்படி, வேண்டுகோள் அல்ல; கட்டளையிட வேண்டும் என்று கேட்டு கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் ஆகியோருக்கு இன்று கடிதம் அனுப்ப இருக்கிறேன். முல்லைத்தீவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மூலம் உதவி கிடைத்து வருகிறது. எனவே அவர்களை அங்கிருந்து திரும்ப அழைக்கக்கூடாது என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து தந்திகளை அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
நன்றி -மாலைசுடர்

Friday, February 6, 2009

எம்.ஜி.ஆர்.,மர்மமும் ,புலிகள் பின்வாங்கும் ரகசியமும்

நம்பினால் நம்புங்கள் ..இலங்கையில் தற்போது நடைபெறும் இன அழிப்பு சண்டைக்கும் ராமாயண சண்டைக்கும் நிறைய ஒற்றுமை உண்டு ..
இதை பற்றிசிந்தித்தால் சில அபூர்வ ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

திருச்சி ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் இலங்கையை பார்த்தவாறு படுத்துள்ளார்.
ஸ்ரீ ரெண்கத்தில் செவி வலி செய்தி ஒன்று உண்டு.
ஸ்ரீ ரங்கா ராஜ கோபுரம் இரண்டாயிரம் வருடங்களாக அஸ்திவாரத்துடன் மொட்டையாயகவே காணப்படும்.இத்தனை ராஜ கோபுரமாக கட்டி முடித்தால் இலங்கை அழியும் என்ற அச்சம் அப்போது இருந்தது.இலங்கைக்கும் ஸ்ரிறேங்கதுக்கும் என்ன சம்மந்தம்?
புவி அடுக்கு சம்மந்தம் இருக்கலாம் ,பட்டர் பளை தியரி போல.

ஆனால் எத்தனையோ பேரரசர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வந்து போக ,எம்.ஜி. ராமச்சந்திரன் எண்பத்தி மூன்றாம் வருடம் இதை கட்டி முடித்தார் ..அன்று முதல் இன்று வரை அங்கு பிரச்சனைதான் ..(அதற்காக அதை இடித்து விடலாமா என கேட்க கூடாது )

எம்.ஜி.ராமச்சந்திரன் ராம பிரான் பெயரும் ஒன்றே.இருவரது மனைவி பெயரும் ஒன்றே ..ஜானகி ..

ஆனால் ராமர் க்கு ஒரு மனைவி இதை விட்டு விடுங்கள் .

எம்.ஜி.ஆர் விடுதலை புலிகளுக்கு பல உதவிகள் செய்தார்.ஆயுத உதவிகள் செய்தார் .பிரபாகரன் உயரை காப்பாற்றினார் .

இலங்கை ராணுவத்திற்கு உதவிகள் செய்ததால் ,ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்
கொல்லப்பட்ட இடம் ஸ்ரீ பெரும் புதூர் .அங்கு கோயில் கொண்டவர் ராமனிஜர் .அவர் வைணவர்களால் பெருமாள் பள்ளி கொண்ட ஆதிசெசனாக பார்ப்பது உண்டு.பெருமாள் ராம அவதாரம். ராஜிவ் காந்தி கொன்றவர் தாணு .தாணு என்றால் வில் என்று அர்த்தம் ..வில் ராமன் ஆயுதம்.

பிரபாகரன் முதல்அரசியல் கொலை செய்த இடம் இலங்கையில் ஒரு ராமர் கோயில் வாசல் ..
சரி இலங்கை பிரச்சனை முடிவு எப்படி இருக்கும்?

ராவணன் கொடுங்கோல் ஆட்சி செய்த போது,தன்னை யாராலும் அளிக்க முடியாது என்ற கர்வம் தலைக்கு ஏறி ,
நவகிரகங்களை ,தான் அரியாசனம் நடந்து செல்லும் ,படி கட்டில் படுக்க வைத்தான் ..அவர்கள் மீது ஏறி சென்றான் .நாரதர் இவன் கர்வத்தை அடக்க .இவனை அழிக்க,ராவணா ..நவ கிரகங்களை நேராக நிமிர்த்தி போட்டு ஏறினால்தான் உனக்கு பெருமை என்று சொல்ல ...
ராவணனும் அவர்களை நிமிர்ந்து படுக்க சொல்லி மிதித்தான் ..அப்போது சனி பார்வை பட்டு அவன் அழிவு தொடங்கியது .
இது புராணம் .இது பலிக்க போகிறது ...எப்படி ...
ஆஞ்ச நேயர் இலங்கையில் வைத்த தீ இன்றும் எரிகிறது என்று சொல்வார்கள் ..
ஆஞ்ச நேயர் ராமனின் தூதுவர் ...

சனி நிறம் கருப்பு ....
உலக நாடுகளின் வல்லரசு அமெரிக்கா .அதன் அதிபர் ஒபாமா..இவர் ஒரு கறுப்பின தலைவர் ...இவர் பாக்கெட்டில் எப்போதும் இருப்பது ஆஞ்சநேயர் சிலை ..

இப்போது புரிகிறதா யார் இதற்க்கு முடிவு கட்ட போகிறவர் என்று .....

ஹிலாரி கிளிண்டன் முதல் அறிக்கையே ..போரை நிறுத்து என்பது தான் .விரைவில் புலிகளின் மீதான தடைகளை நீக்குவார் ...
உலக நாடுகளின் உதவியால் தமிழ் ஈழம் மலரும்.