Thursday, November 20, 2008

மசாலா பிட்ஸ் .மசாலா பிட்ஸ் ...

இன்று நான் படித்தவை,கேள்வி பட்டவை,பார்த்தவை பற்றி கலவையாக ஒரு வரி செய்திகளில் தருகிறேன் ...

.
@செவ்வாய் இரவு என் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் ,அந்த கோரமான விபத்தை பார்த்தேன் .அதிர்ந்தேன் ..கரூர் அருகில் உள்ள சிறிய கிராமம் பஞ்சமா தேவி ..அருகில் அமராவதி ஆறு .மணல் லாரி கள்அந்த சிறு கிராமம் வழியாக கணக்கில்லாமல் சென்று வரும்.அன்று வழக்கம் போல சீறி வந்த மணல் அரக்கன்களில்,இளைஞர் ஒருவரை தலை வேறு முண்டம் வேராக துண்டிததை பார்த்து ...அந்த கிராமமே கதறி அழுததை இன்னும் மறக்க முடிய வில்லை.அந்த மக்கள் ,இனி இந்த கிராமம் வழியாக மணல் லாரிகள் வர கூடாது என போராடு கிறார்கள்.இதை முன்பே செய்திருக்கலாம் .மற்ற கிராம மக்களுக்கும் இது எச்சரிக்கை.


@விபசார அழகி சோனா கைது ஆனார் .அவரிடம் குமுதம் பெட்டி கண்டுள்ளது.அந்த வாக்கு மூலத்தில் தன்னுடன் தொடர்பு வைத்திருந்த நடிகை கள் நிறைய பேர் என லிஸ்ட் கொடுத்துள்ளார்.
அதில் பூ நடிகை,,அந்த கால அக்கா தங்கை நடிகை (அம்பி ,ரா ?)பிரியா நடிகை ,என போகிறது .அப்பொழுது சம்பளம் கம்மி.அதனால் பெரும்பாலான நடிகை கள் எங்களை போன்ற விபசார புரோக்கர் கலை நம்பித்தான் அவர்கள் இருந்தனர்.தங்கமான காங்கிரஸ் தலைவர் எங்கள் ரெகுலர் கஸ்டமர் என அதிர வைத்துள்ளார்.


@கச்சா என்னை விலை சரி பாதியாக குறைந்த பிறகும் பெட்ரோல் விலை குறைக்காது ஏன் என்ற கேள்வியை இரண்டு நிதி அமைச்சர்களை கேட்டால் பேய் முழி முழிப்பார்கள் -அரசு பதில்கள்


@ராஜிவ் காந்தியை துப்பாக்கி பின் மட்டையால் அடித்த சிங்கள வீரன் பற்றி காங்கிரஸ் கருத்து என்ன ..என்று அரசு பதில் கேட்டுள்ளார்


@அவினாசி இலங்கை அகதிகளை சந்தித்து ,அவர்களுக்கு உதவி செய்து ,ஆறுதல் கூறி ,அரசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் விஜயகாந்த்-ஆனந்த விகடன்


@சித்தர்கள் ,ஞானி கள் பற்றி தான் அறிந்த வற்றை ஆதர பூர்வமாக எழுதி உள்ளார் இந்திர சௌந்தர்ராஜன் (மர்மதேசம் புகழ்)
பாகெட் நாவல் வெளியீடு ,தலைப்பு -சித்தர்கள் ராஜ்ஜியம்

Wednesday, November 19, 2008

""சமீபத்தில் ரசித்த எஸ்.எம்.எஸ்.... ''-ஆனந்த விகடன்


""சமீபத்தில் ரசித்த எஸ்.எம்.எஸ்.... ''- சிவரஞ்சனி, தஞ்சாவூர்.

"" கடந்த 2 மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் கர்ப்பமான பெண்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட 50 லட்சம் வரை அதிகரித்திருக்கிறது. இந்த அளவு அபார ஏற்றம் இதுவரை மற்ற இந்திய மாநிலங்களில் பதிவானது இல்லை. குடும்ப நல அதிகாரிகள் காரண காரியத்தை அலசி ஆராய்ந்தால், கண் சிமிட்டிச் சிரித்ததாம்.... ஒரே காரணம் "பவர்கட்' !

""உயர்ந்த கோட்பாடுகள் மலிவடைவது எப்போது ?''

"" அவற்றின் அர்த்தம் தெரியாமல் சடங்காக மாற்றிக் கடைபிடிக்கும்போது, ஓஷோ பிறப்பால் ஒரு ஜெயின். ஆனால், சமண மதத்தில் காரணம் தெரியாமலே கடைபிடிக்கப்படும் விடாப்பிடியான பழக்க வழக்கங்களைக் கடுமையாக விமர்சித்தார். ஒரு முறை அவர் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது, எதிர்அறையின் ஜன்னல் வழியாகத் தெரிந்த காட்சி அவரைக் குழப்பமடைய வைத்தது. விரிப்புகள் இல்லாத மரக்கட்டில். அதில் இரண்டு மனிதர்கள் நெளிந்தபடி நாள் முழுவதும் படுத்துக்கிடந்தார்கள். மாலையில் அவர்கள் வெளியே வந்தவுடன், ஓஷோ கூப்பிட்டு விசாரித்தார். மரக்கட்டிலில் இருக்கும் மூட்டைப் பூச்சிகள் ரத்தம் குடிக்காமல் செத்துவிடும் என்பதற்காக சமண முனிவர்கள் அந்த இருவரையும் மூட்டைப்பூச்சிகள் ரத்தம் குடிப்பதற்காக வாடகைக்கு நியமித்திருந்தார்களாம்.

"" மூட்டைப் பூச்சிகளுக்காகக் கவலைப்பட்டவர்கள், அந்த இரண்டு மனிதர்களுக்காக கவலைப்படவில்லையே'' என்கிறார் ஓஷோ. எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பது சமண மதத்தின் உன்னதமான கோட்பாடு. ஆனால், அதன் அர்த்தம் புரியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும்போது, அதுவே வன்முறையாகவே மாறி விடுகிறது !''


"" தாய்'' - சிறு குறிப்பு வரைக.'' - ர.சௌந்தர்யா, திருப்பூர்.

"" பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி வெளியிட்டு இருந்த கல்லூரி மலர் ஒன்றில் நான் படித்த இந்தக் கவிதையை நீங்களும் படியுங்கள்.

மழையில் நனைந்து கொண்டே
வீட்டுக்கு வந்தேன்
" குடை எடுத்துட்டுப்
போக வேண்டியது தானே'
என்றான் அண்ணன்
"எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
" சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல ;
மழையை !''

நன்றி-தினமலர்,ஆனந்த விகடன்

Monday, November 10, 2008

நடப்பது ஜனநாயக ஆட்சி தானா?..குமுதம் அரசு பதில்கள்

வாழ்க்கை ரொம்பவே போரடிக்கிறதே, என்ன செய்வது?

சங்கீத சரவணன், கூறைநாடு.


உங்களுக்குச் சற்றும் விருப்பமில்லாத ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாக அர்த்தம். உங்கள் மனதுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கக் கூடிய, இதுதான் வாழ்க்கை என்று நம்பக்கூடிய, படைப்புத் திறன் மிக்க ஒரு வேலைக்கு மாறுங்கள். இத்தனை நாள் தொலைத்ததாக நீங்கள் நினைக்கும் மனமகிழ்ச்சியை கண்டடைவீர்கள். (சம்பளத் திற்கு நான் கியாரண்டிஅல்ல! )

அடுத்த கனவுக்கன்னி தமனாவா?

ஆர். சிவகுமார், தோவாளை.

பழைய மாதுரி திக்ஷ?த்தை நினைவுபடுத்துகிறார். தோற்றத்தில் மட்டும்.

நடப்பது ஜனநாயக ஆட்சி தானா?
ஆர். சண்முகம், மதுரை.


தமிழ்நாட்டில் பொதுவாக நடக்கும் ஆட்சி பற்றிக் கேட்கிறீர்களா? அல்லது உங்கள் ஊரில் நடக்கும் ஆட்சி பற்றிக் கேட்கிறீர்களா?

மகாத்மா காந்தியின் பொன்மொழிகளில் உங்களுக்குப் பிடித்தது எது?
ஆர். செல்வமோகன், முருங்கப்பேட்டை.


"நீ இந்த உலகத்தில் காண விரும்பும் மாற்றங்களை முதலில் உன்னிடம் கொண்டு வா!"

திரைத் துறையினரின் ராமேஸ்வரம் ஊர்வலம், எம்.பி.க்கள் ராஜினாமா, மனிதச் சங்கிலி, அனைத்துக் கட்சிக் கூட்டம் போன்றவை இலங்கைத் தமிழர் பிரச்னையை எந்த அளவுக்குத் தீர்த்து வைக்கும்?
கனகசபாபதி, திரேஸ்புரம்.


உலகத்தின் கவனத்தை சில நாட்கள் ஈர்க்க வைக்கும். அவ்வளவுதான். அப்புறம் எல்லோரும் அவரவர் வேலையை கவனிக்கப் போய் விடுவார்கள். இலங்கைப் பிரச்னை தீர்வதற்கு உடனடித் தேவை தீர்க்க தரிசனம், மனிதாபிமானக் கண்ணோட்டம், விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டையும் விமர்சித்து அடக்கக் கூடிய தார்மீகத் துணிச்சல் மற்றும் நியாயத்தின் பக்கம் நிற்கும் நேர்மை. இவை யாருக்குத் தேவை? மத்திய அரசாங்கத்துக்கு. அது கண்ணுக்கெட்டிய தூரம் தெரியவில்லை.

நண்பர்கள் தவறு செய்யும் போது அவர்களை எப்படி கண்டிப்பது?
ஆர். செல்லப்பன், ஆத்தூர்.


எதிரிகளை விமர்சிக்கும் போது, அது பூனை எலியைக் கவ்வுவது போல் இருக்க வேண்டும். அதுவே நண்பர்களை விமர்சிக்கும் போது, பூனை தன் குட்டியைக் கவ்வுவது போல் இருக்க வேண்டும். அதனால் கடுதோச்சி மெல்ல எறிக.

இயக்குநர் ஸ்ரீதர்?
எம். சுந்தரவடிவு ஆம்பூர்.


கறுப்பு வெள்ளையில் காவிய ஒளியமைப்பைக் காட்டிய கவிஞர். வண்ணத்தில் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை வரைந்த ஓவியர். மிகைப்படுத்தப்பட்ட நாடகபாணியில் தமிழ் சினிமா தறிகெட்டு ஓடிய காலத்தில், மனித உறவுகளின் சிக்கல்களை மேன்மையாகச் சித்திரித்த இலக்கியவாதி. இன்றைய தமிழ் சினிமாவில் கூடப் பார்க்க முடியாத சூகிளாஸ்' என்று சொல்லப்படும் மேற்பட்ட தரத்தை அன்றே காட்டிய கலைஞர். சினிமாக்களை இயக்காத கடைசி காலங்களிலும் ஒரு சாதித்த இயக்குநரின் மிடுக்குடன் அவர் இருந்தது தன்னம்பிக்கையின் அடையாளம்.

முன் ஜென்மம், மறுபிறவி போன்றவற்றில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
ஏ.ஜி.கல்யாணசுந்தரம், கோவை.


""போன ஜென்மத்தில் உங்களிடம் நான் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். இப்போது திருப்பித் தரலாமா?'' என்று யாராவது சொன்னால் நம்பலாம். "போன ஜென்மத்தில் உமது மனைவியை நான்தான் கல்யாணம் செய்திருந்தேன். ப்ளீஸ் கிவ் ஹர் பேக்..'' என்றால்? மரணம் என்பது என்னைப் பொறுத்தவரை முற்றுப்புள்ளி. அங்கே சூகமா' வே கிடையாது.

சர்தார்ஜி ஜோக் ஏதாவது?
என். காளிதாஸ், சிதம்பரம்.


இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம் அது. அப்போது இந்தியாவில் விளைந்த அரிசிக்கு உலகச் சந்தையில் கிராக்கியே இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் பாஸ்மதி அரிசி அதை விடச் சுவைமிக்கது. பிரிவினையின் போது பாஸ்மதி விளைந்த நிலப்பகுதிகள் பாகிஸ்தான் வசம் சென்று விட்டன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் விவசாயத்துக்குப் புகழ் பெற்றது. அவர்களின் அடிப்படைத் தொழிலே விவசாயம்தான். தங்களின் அரிசிக்கு உலக மார்க்கெட்டில் மதிப்பில்லாதது அவர்களை ரொம்பவே பாதித்தது. ஆனால் அவர்களிடம் பாஸ்மதி அரிசியின் விதைகள் கூட இல்லை. என்ன செய்வது? பஞ்சாப் மாநில சர்தார்ஜி விவசாயிகள் ரகசியமாக ஒன்று கூடினார்கள். எல்லை தாண்டி உள்ள பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி விதை நெல்லைக் கொண்டு வருவது என்று முடிவு செய்தார்கள். அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. எல்லையில் உள்ள இருதரப்பு ராணுவத்துக்கும் கொடுக்கக் கூடிய லஞ்சப் பணமே கோடிக்கணக்கில் ஆகும்.


சர்தார்ஜிக்கள் அசரவில்லை. பஞ்சாபின் அனைத்து விவசாய கிராமங்களிலும் இதற்கான நிதி ரகசியமாகத் திரட்டப்பட்டது. தேவைப்பட்ட பணம் வசூலாகச் சில வருடங்கள் பிடித்தன..ஒரு நாள் நள்ளிரவு, பாகிஸ்தானிலிருந்து நாற்பது லாரிகளில் பாஸ்மதி விதை நெல் மூட்டைகள் எல்லை கடந்து பஞ்சாப் வந்தன. பாஸ்மதி விவசாயமும் கோலாகலமாக ஆரம்பித்தது. சர்தார்ஜிக்கள் உடனடி லாபத்தை எண்ணி அறுவடையை சந்தைக்கு அனுப்பவில்லை. எதிர்காலத்தை மனதில் வைத்து விதை நெல்லை சேமிப்பதற்காக அடுத்த சில வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தார்கள். அடுத்த சில வருடங்களில் அந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்தது. உலக அரிசிச் சந்தையில் இந்திய பாஸ்மதி அரிசி விற்பனையில் பாகிஸ்தானை ஓரம் கட்டியது. ராங் ரூட்டில் சென்றாலும் சர்தார்ஜிக்கள் சாமர்த்தியமாய் செய்துகாட்டிய பெரும் சாதனை இது. அப்படிப்பட்ட புத்திசாலி காரியக்காரர்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பது நியாயமா? நீங்களே சொல்லுங்கள்!


(நன்றி: பாரதி மணியின் கட்டுரை)

Saturday, November 8, 2008

பிளாஷ் நியூஸ் ;கலைஞர் க்கு மகத்தான வெற்றி ..!

இலங்கை தமிழர் விவகாரத்தில் கலைஞர்க்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது;அவர்களின் கண்ணீர் துடைக்கபட்டுள்ளது;இனி அவர்கள் கலங்க வேண்டியதில்லை.தமிழினத்தின் காவல் தெய்வம் ,,,உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் ..இலங்கை தமிழர்களின் கண்ணீர் துடைக்க ..எடுத்த அதிரடியான ...சிங்களர்களை நடுங்க வைக்கும் ...முடிவான ,நிவாரண நிதி ..அதாவது இலங்கை தமிழன் ..நாயடி பேயடி வாங்கி டவுசர் கிழிந்து போய் இருக்கும் அவன் ,கை கால் உடைந்து ...ஒளிந்து வாழும் அவன் ...புது டவுசர் தைத்து கொள்ளவும் ....வயிறார சாப்பிட்டு விட்டு ....(.மீண்டும் பொ...இல் உதை வாங்க தெம்பு வேணுமே )உயிர் வாழ ? கலைஞர் திரட்டும் நிவாரண நிதி இன்று மட்டும் ஐந்து கோடி வசூல் ஆகி உள்ளதாம் ....


நிவாரண நிதி சேர்த்து .உணவு பொட்டலம் சேர்த்து கொண்டு வருகிறோம்....இலங்கை தமிழா.....அதுவரை உன் கர்ப்பிணி மனைவி யையும் .வயதான அப்பன்,ஆத்தாவையும்,சிறு குழந்தைகளையும் ஒரு புதருக்குள் பத்திரமாய் வையடா...அங்கே பாம்பு இல்லாமலும் பார்த்து கொள்ளடா....
நம் தலைவர் ..உனக்காக இங்கே பிச்சை எடுக்கிறார் ரடா....நீயும் நானும் ஒரு இனம் அதை மறந்து விடாதே....நமக்கிடையில் கடல் உண்டு மறவாதே....அந்த கடல் நீர் உன் கண்ணீர் என்பதை நானும் மறவேன்..இன்று உன் வீட்டில் என்ன துக்கம் என்பதை எண்ணியே என் ஒவ்வொரு மணி துளிகளும் செல்கிறது...என கவிஞன் கள் கண்ணீர் வடிப்பார்...

நாம் ஒற்றுமையுடன் இருப்போம் ..மத்திய அரசை வீணாக விமர்சித்து என் பொழப்பை கெடுக்காதே என அரசியல் வாதி நீலி கண்ணீர் வடிப்பான் ..

என் தமிழன் புழுக்கம் தாங்காமல் தான் கண்ணீர் வடிப்பான்...ஏனெனில் அவன் அவேசபட்டால் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் வருமே.....இந்தியன் அல்லவா..அதையும் கருத்தில் கொண்டு .....ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி நாற்பது ரூபாய்க்கு கத்திரிக்காய் வாங்கி சோறு தின்னும்....எம் தமிழர்களை ...நீ ஒரு வேளை!உயிர் பிழைத்து அகதியாய் கரை ஒதுங்கும் போதுஏதேனும் கேள்வி கேட்டு விடாதே.....நெஞ்சம் சுக்கு நூறாய் உடைந்து விடும் .....
அப்படி கேட்டாலும் கலங்க மாட்டேன் ..ஏனெனில் உனக்காக நான் ...இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ..நூறு ரூபாய் அனுப்பி விட்டேன்....

இந்த வர ஜுனியர் விகடன் இதழில் ...எந்த தமிழ் ஆண் மகனும் கேட்க துணியாத ..கேள்விகளை அரசியல் வாதிகளை பார்த்து ,கவிஞர் தாமரை கேட்டு உள்ளார்..அந்த கேள்விகனைகள் சாதாரணம் அல்ல....அந்த பெண்ணுக்காக நீ பிரார்த்தனை செய்..இலங்கை தமிழா...
இலங்கை பிரச்சனை யை கலைஞர் தீர்க்கவே முடியாது...என தீர்க்க தரிசனத்துடன் இன்று அறிக்கை விட்டுள்ள புரச்சி தலைவிக்கு ஒரு சபாஸ் சொல்லு.

கலைஞர் தந்திரம் கற்று கொண்டு ..மும்பை யில் வடக்கத்தியார் தாக்க படுவதை கண்டித்து ..லாலு தன் கட்சியினரை ராஜினாமா செய்ய சொன்ன ...விவகாரத்தில் இருந்து ..கலைஞர் ராஜதந்திரம் எத்தனை அரசியல் வாதிகள் பிழைப்பு ஓட்ட ..உதவி செய்கிறது...எண்ணி பாரு ...